29 காவல் நிலையங்களின் 29 அதிகாரிகளுக்கு எழுத்து தேர்வு

ஆரம்பம் முதல் நடப்பு நிகழ்வுகள் வரையான வினாத்தாள்
29 காவல் நிலையங்களின் 29 அதிகாரிகளுக்கு எழுத்து தேர்வு
x
புதுச்சேரியில் உள்ள 29 காவல் நிலையங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எழுத்துத் தேர்வு நடத்தினார். அவரது மாளிகையில்  நடத்தப்பட்ட தேர்வில், ஆரம்பம் முதல் நடப்பு நிகழ்வு வரையான கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில், துப்பறியும் திறன், சைபர் கிரைம், சட்ட விதிகள் தொடர்பான கேள்விகள் இருந்தன. இத்தேர்வின் போது மூத்த மற்றும் உயர் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர். அனைவரும் ஏ கிரேடு தகுதியில் தேர்வுபெற்ற நிலையில்,  மாநிலத்துக்கு வெளியே சில பயிற்சிகள் தேவைப்படுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்