செல்போனில் ஆண் நண்பருடன் பேசிய மகள் :ஆத்திரத்தில் தீ வைத்த தந்தை

மும்பையில் ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய மகளுக்கு தந்தை தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனில் ஆண் நண்பருடன் பேசிய மகள் :ஆத்திரத்தில் தீ வைத்த தந்தை
x
மும்பையின் விரால் பகுதியில் வசித்து வரும் மன்சூரி என்பவரது மகள் சைஸ்தா. 16 வயதான இந்த சிறுமி, கடந்த 31ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் செல்போனில் பேசியுள்ளார். இதைப் பார்த்து கோபமடைந்த அவரது தந்தை செல்போனை உடைத்ததுடன், ஆத்திரத்தில் மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 70 சதவீதம் தீக்காயம் அடைந்த அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மன்சூரியை போலீஸார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்