சபரிமலை சன்னிதானம் 18ம் படி அருகே பரபரப்பு

தீப்பிடித்து எரிந்த ஆலமரம் - பக்தர்கள் பீதி
சபரிமலை சன்னிதானம் 18ம் படி அருகே பரபரப்பு
x
சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதானம் அருகே 18ம் படிக்கு முன்பு மிகவும் பழமையான ஆலமரம் ஒன்று நேற்று காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சில மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். விபத்து குறித்து விசாரித்தபோது, ஹோம குண்டத்தில் இருந்து வந்த தீயால், விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் கொழுந்து விட்டு எரியும் நிலையில், சன்னிதானம் அருகே உள்ள ஆலமரம் தீப்பிடித்ததால் பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்