அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் விவகாரம்: மேல்முறையீட்டு விசாரணை ஜனவரி 10 க்கு ஒத்திவைப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தின், மேல்முறையீட்டு விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் விவகாரம்: மேல்முறையீட்டு விசாரணை ஜனவரி 10 க்கு ஒத்திவைப்பு
x
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று  விசாரணைக்கு வந்த இந்த  வழக்கின் விசாரணை ஜனவரி 10 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் உரிய அமர்வு விசாரணையைத் தொடங்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.  இந்த வழக்கை தினசரி விசாரிக்க வேண்டும் என்கிற மேல்முறையீட்டினையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  பொதுத் தேர்தலை முன்னிட்டு அயோத்தி விவகாரம் மீண்டும் சூடுபிடித்து வரும் நிலையில்  இந்த மேல்முறையீட்டு வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கவனிக்கப்படுகிறது.   

Next Story

மேலும் செய்திகள்