மேகதாது விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி

மேகதாது விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மேகதாது விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி
x
மக்களவை இன்று காலை கூடியதும் மேகதாது விவகாரத்தை மையப்படுத்தி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  இதேபோல், ரஃபேல் விவகாரத்தை முன்னிறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவையிலும் இதே விவகாரங்களை முன்னிறுத்தி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நீடித்ததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்