தாஜ்மஹாலை பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள் - செயல்படாத சிசிடிவி கேமராக்களால் பாதுகாப்பு கேள்விக்குறி

தாஜ்மஹால் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருப்பதால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக, சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தாஜ்மஹாலை பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள் - செயல்படாத சிசிடிவி கேமராக்களால் பாதுகாப்பு கேள்விக்குறி
x
தாஜ்மஹால் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருப்பதால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக, சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு நாள்தோறும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பாதுகாப்பு கருதி, தாஜ்மகாலில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் பெரும்பாலான கேமராக்கள் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இவற்றை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்