ஒடிஷா எல்லையில் வயல்வெளிகளை சூறையாடிய 120 யானைகள்

ஒடிஷா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.
ஒடிஷா எல்லையில் வயல்வெளிகளை சூறையாடிய 120 யானைகள்
x
ஒடிஷா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், யானைகள் கூட்டம் புகுந்துள்ளது. ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ரசாகோபிந்த்பூர் வனச்சரகத்தில், 120 யானைகள் சுற்றித் திரிகின்றன. அவை, அங்குள்ள வயல்வெளிகளில் புகுந்து நெல் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 2 முதல் 4 குழுக்களாக, அங்குள்ள கிராமங்களில் கூட்டம், கூட்டமாக யானைகள் வலம் வருகின்றன. அவற்றை காட்டுக்குள் விரட்டுவதற்கு போதுமான ஆள்பலம் உள்ளிட்ட வசதிகள் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்