மத்திய பிரதேச முதலமைச்சராக வரும் 17-ம் பதவியேற்பு

மத்திய பிரதேச முதலமைச்சராக வரும் 17-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதலமைச்சராக வரும் 17-ம் பதவியேற்பு
x
தலைநகர் போபாலில் ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம், இந்த தகவலை கமல்நாத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விவசாய மேம்பாடும், வேலைவாய்ப்பை உருவாக்குவதுமே தங்களின் நோக்கம் என்று தெரிவித்தார். மத்தியப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற ​தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் 4 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்