மத்திய பிரதேச முதலமைச்சராக வரும் 17-ம் பதவியேற்பு
மத்திய பிரதேச முதலமைச்சராக வரும் 17-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
தலைநகர் போபாலில் ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம், இந்த தகவலை கமல்நாத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விவசாய மேம்பாடும், வேலைவாய்ப்பை உருவாக்குவதுமே தங்களின் நோக்கம் என்று தெரிவித்தார். மத்தியப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் 4 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story