விவசாயக் கடன் தள்ளுபடி : பொருளாதார குழப்பம் ஏற்படும் - ரகுராம் ராஜன்

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் நாட்டில் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்படும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
விவசாயக் கடன் தள்ளுபடி : பொருளாதார குழப்பம் ஏற்படும் - ரகுராம் ராஜன்
x
ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக-வுக்கு தோல்வி ஏற்பட்டதால், வரும் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மத்திய அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் கூறியிருந்தனர். தற்போது அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரகுராம் ராஜன், விவசாயக் கடன் தள்ளுபடி மூலம் நாட்டின் பல கோடி விவசாயிகளுக்கு நேரடியாக பயன் கிடைக்கும்  என்றாலும்,   கடன் தள்ளுபடியால் இந்திய பொருளாதாரத்தில் நெருக்கடிகளும் உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.ரகுராம் ராஜனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்