கொச்சி விமானநிலைய உள்நாட்டு முனையம் திறப்பு

கேரளா மாநிலம், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு முனையத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.
கொச்சி விமானநிலைய உள்நாட்டு முனையம் திறப்பு
x
கேரளா மாநிலம்,  கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு முனையத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்தார். 240 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் கேரள பாரம்பரிய கட்டடக்கலை பாணியில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் சதுரடியில், 4 ஆயிரம் பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த முனையத்தில், 56 கவுண்டர்கள், ஏழு ஏரோபிரிட்ஜ்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. சிறப்பம்சமாக, கேரள பாரம்பரிய நடனம், ஓவியத்தை பறைசாற்றும் கலை கூடமும் புதிய முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்