தெலங்கானா, ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - பிரபலங்கள் வாக்களித்தனர்

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
தெலங்கானா, ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - பிரபலங்கள் வாக்களித்தனர்
x
தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தெலுங்கானாவின் 119 தொகுதிகளுக்கும், ராஜஸ்தானின் 200 தொகுதிகளுக்குமான வாக்குபதிவு, பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகளுக்கு இடையே   மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள ஜூப்பிலீ ஹில்ஸில் உள்ள வாக்குச்சாவடியில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மற்றும் அவரது மனைவி அமலா வரிசையில் நின்று வாக்களித்தனர். ராஜஸ்தானின் ஜாலாவார் தொகுதியில் போட்டியிடும் பாஜக முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஜால்ராபட்டன் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக அங்கு வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்