அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : முக்கிய இடைத்தரகர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை துபாய் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : முக்கிய இடைத்தரகர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்
x
* ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை துபாய் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. டெல்லி சிபிஐ தலைமையகத்தில் அவரிடம்  அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து  12  ஹெலிகாப்டர்களை வாங்க 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள சிலருக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கியதாக புகார் எழுந்தது.  இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு  இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

* இது தொடர்பாக பலர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகின்றது.  இந்நிலையில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டருக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார்.  அவரை நாடு கடத்துவதற்கு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

* இதையடுத்து  விமானம் மூலம் கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டார்.  இதனால் ஊழலில் தொடர்புடைய சில முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்