தங்கை, தாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மருத்துவர் : கடிதம் மற்றும் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை

பெங்களூருவில் தங்கை மற்றும் தாயை மருத்துவர் ஒருவர் கொலை செய்து விட்டு அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கை, தாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மருத்துவர் : கடிதம் மற்றும் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை
x
பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த சுப்பாராய் பட் - மூகாம்பிகா தம்பதிக்கு கோவிந்த பிரகாஷ், சியாமளா என 2 பிள்ளைகள். 1994 ஆம் ஆண்டு திருமணம் ஆன சியாமளா, 2 ஆண்டில் விவகாரத்து ஆன நிலையில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மருத்துவர் கோவிந்த பிரகாசுக்கு 40 வயதான நிலையிலும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கை சியமளாவும், தாய் மூகாம்பிகாவும் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளனர். கோவிந்த பிரகாசுக்கும் தீராத தலைவலியால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நேற்று காலை தூக்கத்தில் இருந்து கண்விழித்த சுப்பாராய் பட், பக்கத்து அறையில் மூகாம்பிகா, சியாமளா ஆகியோர் உயிரிழந்ததும், கோவிந்த பிரகாஷ் உயிருக்கு போராடுவதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் கோவிந்த பிரகாஷ் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கிருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்