கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
x
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னைக்கு பால் பவுடர் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் சென்னை விமான நிலையத்திலிருந்து சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே  குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவை சேர்ந்த காரின் உரிமையாளர், குவைத் நாட்டில் இருந்து வந்த உறவினர்களை அழைத்து சென்ற போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்