சபரிமலை 144 தடை உத்தரவு இன்றுடன் நிறைவு....

சபரிமலையில் 11 நாட்களாக தொடரும் 144 தடை உத்தரவு இன்று நள்ளிரவோடு நிறைவு பெறுகிறது.
சபரிமலை 144 தடை உத்தரவு இன்றுடன் நிறைவு....
x
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவால், இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை கோயில் சன்னிதானம், பம்பை, நிலக்கல், இலவுங்கல் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவை கேரள அரசு பிறப்பித்தது. கடந்த 11 நாட்களாக நீடித்து வரும் இந்த உத்தரவு, இன்று நள்ளிரவோடு நிறைவு பெறுகிறது. தடை உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது இன்று மாலையில் தெரியவரும். இதற்கிடையே, மாளிகைப்புரம் கோயில் முன்பு நேற்று இரவு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போல, தீர்ப்பு தொடர்பாக ஐ.பி.எஸ். அசோசியேஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்