ஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து
ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புப் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இறந்தவர் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண
உதவி வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
Next Story