"தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும்" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு துணை நிற்கும் என அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு துணை நிற்கும் என அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தாராளமாக நிவாரண பொருட்கள் வழங்கி உதவிய தமிழகத்திற்கு கேரளா எப்பொதும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு கேரளா பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஆலப்புழை, எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்களும் இணைந்து நிவாரண பொருட்களை அனுப்ப தயாராகி வருவதாக பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.
Next Story