சபரிமலை விவகாரம் - கேரள முதலமைச்சர் விளக்கம்

சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராடுவது அரசியல் லாபத்திற்காகவே என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
சபரிமலை விவகாரம் - கேரள முதலமைச்சர் விளக்கம்
x
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக, பாஜக மட்டுமன்றி காங்கிரசாரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,  ஆர்.எஸ்.எஸ், பாஜகவுடன் இணைந்து போராடும் காங்கிரசார் பக்தியால் போராடவில்லை என்றும் அரசியல் லாபத்திற்காக தான் போராடுகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், பக்தர்கள் மற்றும் செய்தியாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு நெருக்கடி தந்ததால் தான் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்பினர், தன்னை நேரடியாக சந்திக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்