மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு, கொல்கத்தாவில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
x
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு, கொல்கத்தாவில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, புதுடெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் வருகிற 22 ம் தேதி, கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த கூட்டம் நடைபெறும் புதிய தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்