பிச்சை எடுத்த பணத்தில் மது அருந்திவிட்டு மயங்கிய தந்தை

பெண் குழந்தையை வைத்து பிச்சை எடுத்த தந்தை அந்த பணத்தில் மது அருந்திவிட்டு சாலையிலே மயக்கமடைந்த‌ நிலையில் பசியில் தவித்த குழந்தை தந்தையை எழுப்ப போராடிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிச்சை எடுத்த பணத்தில் மது அருந்திவிட்டு மயங்கிய தந்தை
x
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி சென்னம்மா வளைவு என்ற பகுதியில் ஒருவர் தனது பெண் குழந்தையை வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அதன் மூலம் கிடைத்த பணத்தில் மது அருந்திய அவர், போதை தலைக்கேறிய நிலையில் சாலையிலே மயங்கி கிடந்துள்ளார். இதனால், பசியின் பிடியில் சிக்கி தவித்த குழந்தை கண்ணீர் பொங்கிய கண்களுடன் தனது தந்தையை எழுப்ப முயற்சித்துள்ளது. இந்த காட்சியை கண்டு சாலையில் சென்ற பலரும் கண்ணீர் சிந்திய நிலையில் ஒருவர் வீடியோவாக பதவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்