கே.ஆர்.எஸ் அணைக்கு அருகே காவிரி தாய்க்கு சிலை : கர்நாடக அரசு திட்டம்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணைக்கு அருகே காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணைக்கு அருகே காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடந்தது. அப்போது கே.எஸ்.ஆர். அணைப்பகுதியில் 125 அடி உயரத்தில் காவிரி தாயின் சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன் அணையின் அருகே அருங்காட்சியகம், 2 கண்ணாடி டவர்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story