சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் அடுத்தடுத்து தாக்குதல்

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றம். இதனிடையே , மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் அடுத்தடுத்து தாக்குதல்
x
தேர்தல் நடைபெற உள்ள 18 தொகுதிகளில், 7 இடங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றது. சுக்மா மாவட்டத்தில் சில இடங்களில் வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வீசியுள்ளனர். பிஜப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. அதில், நக்சலைட் தீவிரவாதி கொல்லப்பட்டார். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து பல இடங்களில் தாக்குதல் நீடிப்பதால், சத்தீஸ்கரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்