சபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு
மகரஜோதி தரிசனம் போது சபரிமலைக்கு செல்ல 3 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர்.
10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட 539 பெண்கள், வலைதளம் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திகை மாத சீசனுக்காக நவம்பர் 17 ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட உள்ளது. இந்த சமயத்தில் முன்பதிவு செய்யாமலும் ஏராளமான பெண்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பம்பை, சபரிமலை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
Next Story