இந்தியாவின் 3வது உயரமான தேசிய கொடி சேதம்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் அமைக்கப்பட்டிருந்த இந்தியாவின் 3வது உயரமான தேசிய கொடி காற்றில் சேதமடைந்தது.
அங்குள்ள காந்தி மண்டபத்தில் கடந்த காந்தி ஜெயந்தியன்று முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் இந்த கொடியை ஏற்றி வைத்தார். 319 அடி உயர கம்பத்தில் 120 அடி அகலமும் 80 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த கொடி 35 நாளுக்குள் சேதமடைந்துள்ளது.
Next Story