"6 விமான நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
6 விமான நிலையங்களை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஜெய்பூர், லக்னோ, திருவனந்தபுரம், குவஹாத்தி, அஹமதாபாத் மற்றும் மங்களூரு விமான நிலையங்களை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய பல்கலைக்கழக சட்டத்தின் திருத்தத்தின்படி, ஆந்திராவில் மத்திய பழங்குடி பல்கலைக்கழகத்தை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.
அதேபோல் டிரெட்ஜிங் கார்பரேஷன் ஆப் இந்தியா (dredging Corporation of India) நிறுவனத்தில் அரசிடம் உள்ள மொத்த பங்குகளையும் விற்பனை செய்யவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
Next Story