நியாயவிலை கடை ஊழியர்கள் ஊதியம், போனஸ் நிலுவையை வழங்க கோரிக்கை
புதுச்சேரியில், நியாய விலை கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில், நியாய விலை கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கடந்த 16 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும், தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்தும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஊழியர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றா விட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
Next Story