மெகுல் சோக்சி உதவியாளர் தீபக் குல்கர்னி கைது
பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான ஹாங்காங் போலி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த தீபக் குல்கர்னியை இன்று காலை கொல்கத்தா விமான நிலையத்தில் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹாங்காங்கில் இருந்து கொல்கத்தா திரும்பிய தீபக் குல்கர்னியிடம் அமலாக்கத் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபக் குல்கர்னிக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தேடப்படும் குற்றவாளி என்ற சுற்றறிக்கையை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story