அரசியல் குழப்பத்தால் வன்முறை வெடிக்கும் அபாயம் - ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை

அரசியல் குழப்பம் காரணமாக இலங்கையில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதாக ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் குழப்பத்தால் வன்முறை வெடிக்கும் அபாயம் - ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை
x
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு இலங்கை நாடாளுமன்றம் தீர்வு காணும் என நம்பிக்கை தெரிவித்தார். அதேவேளையில் நம்பிக்கை இழந்த சிலர் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்றும், அதை தவிர்ப்பதற்கு போதிய கால இடைவெளி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறையில் ஈடுபடக் கூடாது என தமது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்கே தற்போதைய சூழ்நிலையில் என்ன நடக்கும் என்பதை கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிபர் சிறிசேனவுடன் மோதல் வரும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் தமது பதவி நீக்கம் நிகழும் என எதிர்பார்க்கவில்லை என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்