சபரிமலை கோயில் நடை இன்று அடைப்பு

ஐப்பசி மாத பூஜை நிறைவு பெற்றதும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்றிரவு அடைக்கப்படுகிறது.
சபரிமலை கோயில் நடை இன்று அடைப்பு
x
பரபரப்பான மிகவும் பதற்றமான சூழலில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 17ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபரிமலைக்கு வந்த 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுவரை 8 பெண்கள் சபரிமலைக்கு வந்ததாகவும் யாரும் கடைசி வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இன்றைய தினம் மாறுவேடத்தில் பெண்கள் யாரும் உள்ளே வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்பதில் ஐயப்ப பக்தர்கள் உறுதியாக உள்ளனர். இன்று இரவு 10 மணிக்கு மூடப்படும் சபரிமலை நடை அடுத்த மாதம் மண்டல பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. இதனிடையே, சபரிமலை வந்த பந்தள ராஜா குடும்பத்தினர் பரிகாரம் மற்றும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்