ஐயப்பன் கோவிலுக்கு சென்ற ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நேற்று செல்ல முயன்ற நான்கு பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல நேற்று ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 10 பெண்கள் அடங்கிய குழுவினர் மலையேற முயற்சித்தனர். அவர்களுள் 2 பேர் பம்பையில் வழிமறித்து திருப்பி அனுப்பப்பட்டனர். புஷ்பலதா என்ற பெண் சன்னிதானத்துக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டார். இதேபோல் சென்னையை சேர்ந்த தவமணி என்ற பெண் தமது கணவருடன் சபரிமலை சென்றார். டோலி மூலம் மலை ஏற அவர் முடிவு செய்தார். அவருக்கு 49 வயது என்பதை அறிந்த டோலியை தூக்கி செல்பவர்கள் அவரை ஏற்றிச் செல்ல மறுத்தனர். பின்னர் அந்த பெண் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டார். அந்த பெண்ணின் கணவர் மட்டும் ஐயப்பனை தரிசிக்க சென்றார்.
Next Story