70 வயது முதியவரை கடித்துக் கொன்ற குரங்குகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரும் உறவினர்கள்...

உத்தர பிரதேசத்தில், முதியவரை கடித்துக் கொன்ற குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
70 வயது முதியவரை கடித்துக் கொன்ற குரங்குகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரும் உறவினர்கள்...
x
உத்தரபிரதேச மாநிலம் பக்பாத் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், தனது வீட்டின் அருகே, விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட குரங்குகள் அவரை கடித்து குதறியுள்ளன. இதனால் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இந்தநிலையில், தனது சகோதரரை கடித்துக் கொன்ற குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த முதியவரின் சகோதரர் கிருஷ்ணபால் சிங், காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்