நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணி : ரூ.20 கோடி சேமிப்பு - புதுச்சேரி துணை நிலை ஆளுனர் மாளிகை விளக்கம்

புதுச்சேரியில், நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளில் சுமார் 20 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணி : ரூ.20 கோடி சேமிப்பு - புதுச்சேரி துணை நிலை ஆளுனர் மாளிகை விளக்கம்
x
புதுச்சேரியில், நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளில் சுமார் 20 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். CSR நிதி கையாண்டது தொடர்பாக ஆளுநர் மீது முதலமைச்சர்  நாராயணசாமி  குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக துணை நிலை ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், CSR நிதி தொடர்பாக முதலமைச்சர்  நாராயணசாமி உண்மைக்கு மாறான கருத்துக்களை தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.  புதுச்சேரி மக்களுக்கு நீர் ஆதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை முதல்வர் விரும்பவில்லையா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்