தான் பிறந்த கர்ப்பப்பையில் தன் குழந்தையை பெற்றெடுத்த தாய் : குஜராத்தில் அதிசயம்

குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் அழகான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
தான் பிறந்த கர்ப்பப்பையில் தன் குழந்தையை பெற்றெடுத்த தாய் : குஜராத்தில் அதிசயம்
x
குஜராத்தை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டில் புனேவில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில், கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது தாயின் கர்ப்பப்பையை வைத்துக் கொண்ட அவருக்கு, தற்போது, ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதன் மூலம், உலகிலேயே தான் பிறந்த கர்ப்பப்பையிலே, தனது குழந்தையை பெற்றெடுத்த 12-வது பெண் என்ற பெருமையை மீனாட்சி பெற்றுள்ளார். மாற்றப்பட்ட கர்ப்பப்பை சரியாக செயல்படாதாதால் மீனாட்சிக்கு மூன்று முறை கருக்கலைப்பு நடந்துள்ளது. பின்னர்,  கர்ப்பபைக்குள் கருமுட்டை செலுத்தப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த ஒரு அழகான தரூணத்துக்காகவே இதுவரை காத்திருந்ததாக மீனாட்சியும் அவரது கணவரும் நெகிழ்ந்துள்ளனர்.

கர்ப்பப்பையை அகற்றிவிட்டால் குழந்தை பெற வாய்ப்பு இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிறந்த குழந்தை என்ற பெருமையையும் பெற்றுள்ளது இந்த குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்