அரசு பேருந்தில் ஓட்டை - மழைநீரில் நனைந்த பயணிகள்
ஓசூர் அருகே பருவீதி கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்து மேற்கூரையில் ஆங்காங்கே ஓட்டை உடைசலாக காணப்படுவதால், மழைநீர் ஒழுகியது.
ஓசூர் அருகே பருவீதி கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்து மேற்கூரையில் ஆங்காங்கே ஓட்டை உடைசலாக காணப்படுவதால், மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். பயணிகள் சிலர் குடை பிடித்த படி பேருந்தில் அமர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. ஒட்டுனர் இருக்கை அருகே மேற்கூரையில் துளை இருந்ததால், பேருந்தின் ஓட்டுனர் மழையில் நனைந்தபடி, பேருந்தை இயக்கினார். ஓசூர் பகுதிகளில் பல அரசு பேருந்துகள் இந்த நிலையில் தான் உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Next Story