" இந்தியாவின் ஊழல் நிறைந்த மனிதர் பிரதமர் மோடி" - ராகுல்காந்தி
இந்தியாவின் பிரதமர் , ஊழல் நிறைந்த மனிதர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் பிரதமர் , ஊழல் நிறைந்த மனிதர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபெல் போர் விமான ஒப்பந்த விவகார முறைகேடு குறித்து சுட்டிக்காட்டினார். இந்த சூழலில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி குறித்து, நாட்டின் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ராகுல்காந்தி கேட்டுக் கொண்டார்.
Next Story