ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவை டிக்கெட் : ஒரு செல் நம்பருக்கு 2 டிக்கெட் மட்டுமே

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆர்ஜித சேவைக்கு ஒரு செல் நம்பர் மூலம் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே பெறும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவை டிக்கெட் : ஒரு செல் நம்பருக்கு 2 டிக்கெட் மட்டுமே
x
திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசிக்கவும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். வரும் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாவும் அவர் தெரிவித்தார். ஆன்லைன் மூலமாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பெரும் பக்தர்களுக்கு, ஒரு செல் நம்பருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்