2019-ல் நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு ஆலோசனை

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடைபெறுகிறது.
2019-ல் நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு ஆலோசனை
x
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக்கான உயர்மட்டக் குழுவில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, அகமது படேல்,  ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர்  இடம்பெற்றுள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் மாநிலப்  பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களிடம், முதல்கட்டமாக இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் எந்தெந்த மாநிலங்களில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பற்றி இறுதி செய்யப்படுகிறது.

நாளை, அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள், சட்டமன்ற குழு தலைவர்களுடன் இந்தக் குழு ஆலோசனை நடத்துகிறது. இதில் மாநிலத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், தமிழகம் சார்பில் மாநில  காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்