"தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்" - பிரதமர் மோடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும் - பிரதமர் மோடி
x
இன்னும் 4 ஆண்டுகளுக்குள் - அதாவது, 2022 ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தை 2 மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 
உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில்  சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மைய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய அவர், 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார். தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்