திருமலை பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா : பவனி வந்த பெரிய தேர்

திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8ஆம் நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமலை பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா : பவனி வந்த பெரிய தேர்
x
திருமலை ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த 13ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன்  மலையப்பர் சுவாமி எழுந்தருளினார். மாட வீதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெரிய தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது, கோவிந்தா... கோவிந்தா... என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோஷமிட்டனர். ரத உற்சவத்தின் போது  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Next Story

மேலும் செய்திகள்