அணுசக்தி கழக தலைவராக கமலேஷ் நில்காந்த் வியாஸ் நியமனம்
இந்திய அணுசக்தி கழக தலைவராக கமலேஷ் நில்காந்த் வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணு சக்தி கழக தலைவராகவும் அணு சக்தி துறை செயலாளராகவும் பதவி வகித்து வந்த டாக்டர் சேகர் பாசுவின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து பாபா அணு ஆராய்ச்சி நிலைய இயக்குனராக இருக்கும் கமலேஷ் நில்காந்த் வியாஸ் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நேற்று பிறப்பித்தது. இன்று அவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணுமின் நிலையங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் அணு சக்தி கழகத்தின் தலைவரின் கீழ் செயல்படும். குஜராத்தை சேர்ந்த கமலேஷ் நில்காந்த் 64 வயது அல்லது 2021ம் ஆண்டு மே 3ம் தேதி ஆகிய இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்.
Next Story