குடிபோதையில் வந்த நோயாளியால் போர்க்களமான மருத்துவமனை...
உத்தரபிரதேச மாநிலம் பந்தா அரசு மருத்துவமனையில், குடிபோதையில் இருந்த நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியது.
உத்தரபிரதேச மாநிலம் பந்தா அரசு மருத்துவமனையில், குடிபோதையில் இருந்த நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியது. குடிபோதையில் மருத்துவமனைக்குள் நுழைந்த அந்த ஐந்து பேரும், அபிஷேக் என்ற மருத்துவரிடம் வம்பிழுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக், அவர்களை தாக்கத் தொடங்கினார். பதிலுக்கு அவர்களும் தாக்கியதை அடுத்து, மருத்துவமனையே போர்க்களமாக மாறியது.
Next Story