3 முக்கிய வங்கிகள் இணைப்பு - இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல்

இந்திய வங்கிகள் அவ்வப்போது பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது விஜயா வங்கி, தேனா வங்கி ,பேங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது.
3 முக்கிய வங்கிகள் இணைப்பு - இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல்
x
விஜயா வங்கி, தேனா வங்கி ,பேங்க் ஆஃப் பரோடா மூன்று வங்கிகளை இணைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூன்று வங்கிகளை இணைப்பதன் மூலம் நாட்டின் 3ஆவது பெரிய வங்கியாக இது இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள், வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விவகாரத்தில் சீரமைப்பு செய்ய மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்