இந்திய எல்லையில் ஊடுருவல் : 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு நகருக்கு அருகே சர்வதேச எல்லையையொட்டிய காக்ரியா என்ற பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவிய தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்திய எல்லையில் ஊடுருவல் : 3  தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!
x
ஆளில்லாத விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் பாதுகாப்பு வீரர்கள் பயன்படுத்தினர். இரு வேறு இடங்களில் நிகழ்ந்த இந்த என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும்,  பாதுகாப்பு வீரர்கள் 12 பேர் காயம் அடைந்ததாகவும்  உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து, ஆயுதங்கள் - வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்