இந்தியாவில் இருந்து புறப்படும் முன் அருண்ஜெட்லியை சந்தித்தேன் - விஜய் மல்லையா
9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாகவும் இதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளேன் எனவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் இருந்து புறப்படும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை தாம் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு
விஜய் மல்லையா தன்னை சந்திக்கவே இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2014 ஆம் ஆண்டிலிருந்து அவரை சந்திக்க நான் அனுமதி தரவில்லை என்றும் அவர் சொல்வது அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றதுது எனவும் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Next Story