தீவிரவாதிகளை தடுப்பது எப்படி? - திருப்பதியில் பாதுகாப்பு ஒத்திகை

திருப்பதியில் நடைபெற்ற தீவிரவாதிகள் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியால், இரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிரவாதிகளை தடுப்பது எப்படி? - திருப்பதியில் பாதுகாப்பு ஒத்திகை
x
நேற்று இரவு எட்டு மணியளவில் திருப்பதி ரயில் நிலையம் பின்புறமுள்ள ஓய்வு அறைக்குள், சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆக்டோபஸ் கமாண்டோ படை வீரர்கள், கையில் துப்பாக்கிகளுடன் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். இதனால், திருப்பதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்களைப் பிடிக்க கமாண்டோ படை வீரர்கள் முயற்சி செய்து வருவதாகவும் தகவல் பரவியது. இதனால் திருப்பதியில் இருந்த பக்தர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு வீரர்கள் அனைவரும் ஓய்வறையில் இருந்து வெளியேறினர். பின்னர் தான் தெரியவந்தது, அது போலீசார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி என்று.. திருப்பதிக்குள் தீவிரவாதிகள் நுழைந்தால், அவர்களை பிடிப்பது எப்படி என்பது குறித்து ஆக்டோபஸ் கமாண்டோ படை வீரர்களுடன் போலீசாரும் இணைந்து ஒத்திகை நடத்தியுள்ளனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியால், திருப்பதியில் நேற்று இரவு முழுவதும் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்