செல்போன் கோபுரத்தில் ஏறிய பெண் - ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

ஆந்திராவில் விசாக பட்டினம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செல்போன் கோபுரம் மீது பெண் ஒருவர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
செல்போன் கோபுரத்தில் ஏறிய பெண் - ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு
x
ஆந்திராவில் விசாக பட்டினம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செல்போன் கோபுரம் மீது பெண் ஒருவர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். அங்குள்ள மால்காபுரம் பகுதியை சேர்ந்த உல்லினா லட்சுமி என்ற அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்ட நிலையில், அவரது நிலத்தை போலீஸ் அதிகாரி ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, போலீசாரும் தீயணைப்பு துறையினரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு, அந்த பெண்ணை கீழே இறக்கினர். இதையடுத்து, புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக அந்த பெண்ணிடம் விசாகபட்டினம் ஆட்சியர் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்