புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் கைது - மேலும் 6 பேருக்கு வலை

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் ஆறு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்
புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் கைது - மேலும் 6 பேருக்கு வலை
x
காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவராக செயல்பட்டு வந்தார். அவர், காலாப்பட்டிலிருந்து புதுச்சேரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்த சில மர்ம நபர்கள்  அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிசென்றனர். இதில் படுகாயமடைந்த ஜோசப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது  தொடர்பாக  தனிப்படை  அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், கொலையில் தொடர்புடைய சந்திரசேகர், செல்வகுமார், பார்த்திபன், முகுந்தராஜ், குமரேசன், ஆனந்தன் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். 

இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஜோசப்புக்கும் மற்றோரு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்ததாகவும், அதன் காரணமாகவே சந்திரசேகர் கூலி படையை வைத்து ஜோசப்பை தீர்த்து கட்டியதும் தெரிய வந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் ஆறு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்