வீட்டிற்குள் நுழைய முயன்ற கொலம்பியா நாட்டு திருடர்கள் கைது

பெங்களூர்: ஜெயா நகரில் கொள்ளையடிக்க முயன்ற கொலம்பியா நாட்டை சேர்ந்த திருடர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீட்டிற்குள் நுழைய முயன்ற கொலம்பியா நாட்டு திருடர்கள் கைது
x
    பெங்களூருவின் ஜெயா நகரில் கொள்ளையடிக்க முயன்ற கொலம்பியா நாட்டை சேர்ந்த சேர்ந்த திருடர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜவுளிக் கடை வியாபாரியின் வீட்டின் காலிங் பெல்லை அடித்தும், ஜன்னல் வழியாக பார்த்தும் யாரும் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்த பெண்,தன்னுடன் வந்த கொள்ளையர்களை அழைக்கிறாள்.  
    அப்போது, கண்காணிப்பு கேமிரா இருப்பதை கண்ட அவர்கள், திருடுவதை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கொலம்பியா நாட்டை சேர்ந்த 5 திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    அவர்கள் முன்னாள் தலைமை செயலாளர் 'கௌஷிக் முகர்ஜி' வீட்டில் உட்பட பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்