லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் : நிதின் கட்கரிக்கு கேரள முதல்வர் பிணராயி விஜயன் கடிதம்
லாரி உரிமையாளர்கள் பிரச்சினையை மத்திய அரசு உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லாரி உரிமையாளர்கள் பிரச்சினையை மத்திய அரசு உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்வதால் கேரளாவில் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில்,இந்த விலையேற்றம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு மின்னஞ்சல் அனுப்பிள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Next Story