" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"
 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி  பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
x
 இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு, புரவஞ்சல் விரைவு நெடுஞ்சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட குடும்பக்கட்சிகள் முயற்சி செய்து வருவதாக  குற்றம்சாட்டினார்.  இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்காக இயற்றப்பட்ட முத்தலாக் முறை ரத்து மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம்,  எதிர்க்கட்சிகளின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டதாக மோடி விமர்சித்தார். 50 ஆண்டு கால பணிகளை பாஜக ஆட்சி, கடந்த 4 ஆண்டுகளில் முடித்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்